விருதுநகர், ஜன.31- உரிய நேரத்தில் பள்ளி செல்வதற்கு தங்கள் கிரா மத்தில் இருந்து அரசு பேருந்துகளை இயக்கிட வேண்டுமென வலியுறுத்தி சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் விருதுநகர் மாவட்ட முதன் மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது சொக்கம்பட்டி. இக்கிரா மத்தை சார்ந்த 30க்கும் மேற் பட்ட பள்ளி மாணவ மாணவி கள் 7 கி.மீ தொலைவில் உள்ள பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர் இந்த மாணவ, மாணவி யர்கள் தினந்தோறும் தங் கள் சொக்கம்பட்டி கிராமத் தில் இருந்து 2 கி.மீட்டர் நடந்து சென்று அருகே உள்ள உடையனேந்தல் கிராமத் திற்கு வரவேண்டும். பின்னர் இங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து பி.புதுப் பட்டிக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். 2 கிலோமீட்டர் நடந்து சென்று பேருந்து ஏற வேண் டிய சூழ்நிலை உள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என வும், மேலும் அந்த பேருந்தில் உள்ள நடத்துனர்கள் தாம தமாக வந்து பேருந்தில் ஏறு வதால் தகாத வார்த்தையில் திட்டுவதாகவும் எனவே தங் கள் கிராமத்தில் இருந்து பேருந்தை பள்ளி நேரங்க ளில் இயக்கிட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 15 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். முடிவில், உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவி கள் போராட்டத்தை தற்காலி கமாக ஒத்தி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.