திண்டுக்கல், மார்ச் 18- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் காட்டு யானைகளால் கொல்லப் பட்ட ராமபட்டிணம் புதூர் விவசாயி தண்ட பாணி, புதுக்கோட்டை விவசாயி சௌந்தி ரராஜன் ஆகியோரது குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வெள்ளியன்று சத்திரப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத்தலைவர் எம். கருணாகரன் தலைமை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செய லாளர் கே.அருள்செல்வன், ஒன்றிய நிர்வா கிகள் பி.முருகேசன், எம்.பழனிச்சாமி, விவ சாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, மாவட்டப்பொருளாளர் ஆர்.தயா ளன், ஒன்றியச்செயலாளர் எஸ்.மனோ கரன், சிபிஎம் ஒட்டன்சத்திரம் ஒன்றியச்செய லாளர் சிவமணி, ஆகியோர் பேசினர். யானை மிதித்துக் கொல்லப்பட்ட ராமபட்டி ணம் புதூர் விவசாயி தண்டபானி, புதுக் கோட்டை விவசாயி சௌந்திரராஜன் ஆகி யோரது குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். அவர் களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.