districts

img

சிக்கல் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் கோரி போராட்டம்

இராமநாதபுரம்,ஆக.10- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கிழக்கு தாலுகா சிக்கல்  ஊராட்சிக்கு உட்பட்டு ஆறு கிரா மங்கள் உள்ளன.  பல்வேறு கட்ட ங்களாக போராடியும் இது வரைக்கும் இந்த கிராமங்க ளுக்கு போதுமான குடிநீர் வசதி  இல்லை. ஊராட்சி மன்ற நிர்வா கம் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் தலையீட்டின் பேரில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக லாரிகள் மூலம் கிராமப்புற மக்க ளுக்கு குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி சிக்கல் பேரூர் மக்கள் ஒற்றுமை குழு சார்பாக வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அம்ஜத் கான் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்,  ஜெயக்குமார் முன்  னிலை வகித்தனர் . தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர்  வி.மயில்வாகனன், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.போஸ், சிக்கல் ஒன்றிய மேம்பாட்டுக்குழு நிர்வாகி கே. பச்சமால், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அமீன்   300 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.