districts

img

அன்னபூரணியும் சிவப்பு எறும்பு சட்னியும் - ராமச்சந்திரவைத்யநாத்

வீதியில் மீன்விற்பனை செய்வோர் கூவி அழைக்காவிட்டாலும் அவர்களின் நடமாட்டத்தை நுகர்ந்து நாலைந்து பூனைகள் குறுக்கும் நெடுக்குமாய் விற்பனை செய்பவரைச் சுற்றி வருவதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். என்னதான் வெட்டிப் போட்ட கழிவுகளை வீசி எறிந்தாலும் சற்றே அவர்கள் அசந்தால், ஒரு நொடியில் இப்பூனைகள் பெருந்துண்டுகளை பறித்துச் சென்றிடும். அந்த நிலையில்தான் இன்றைய தினம் இந்துத்துவ அமைப்புகள் ஜனநாயக வழிமுறைகளிலும் பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் குறுக்கே பாய்ந்து தாக்குதல் தொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டன.

இப்படிப்பட்ட விவகாரங்களில் ஒன்று தான் அன்னபூரணி திரைப்படமும். திரைப்பட தணிக்கைக் குழுவின் அங்கீகரிப்புக்குப் பின்னர் குய்யோ முறையோ என்ற கூச்சல் ஒலிக்கிறது. நாலு திசையிலிருந்தும் திரைப்  படத் தயாரிப்பு நிறுவனத்தையும் பிரதான நடி கையையும் அச்சுறுத்தும் விதமாக வழக்கு கள் தொடரப்படுகின்றன. வெளியிட்ட ஓடிடி நிறுவனம் மன்னிப்புக் கோரி திரைப்படத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட  நடிகையும் பொதுவான மன்னிப்பொன்றைக் கோரியுள்ளார். அதே நேரத்தில் வழக்கம் போல் பெரும்பாலான தமிழ் திரையுலகு சம் பந்தப்பட்டவர்களும் அரசியல் களத்தில் ஆர்வம் கொண்டுள்ள கலைஞர்களும் இதில்  கள்ள மவுனம் காக்கின்றனர். தங்களின் ஆடை பறிக்கப்பட்டு நிர்வாணப்படுத்துவது குறித்து எவ்வித எதிர்வினையாற்றலும் இன்றி  புடிச்சு வைச்ச புள்ளையாராய் தமிழ்த் திரை யுலகு இருந்து வருகிறது. அன்னபூரணியின் கதைக்குள் போவது முக்கியமல்ல. பிராமணர்கள் இறைச்சியைச் சமைப்பதும் சாப்பிடுவதும் புராண இதிகாச நாயகர்கள் இறைச்சி உண்பது என்பதுதான் இங்கே பிரச்னைக்குரியதாகியுள்ளது. இத்த கைய செயல்பாடுகள் இந்து மதத்திற்கும் பண்  பாட்டியலுக்கும் எதிரானது என்று காவிப்  படையினர் கச்சை கட்டி நிற்கின்றனர். இறைச்சி உண்பது என்பதே ஏதோ மிகப்  பெரும் பாவச் செயலாக சித்தரிக்கப்படுவ தோடு, இச்சமூகத்தில் இந்துக்கள் அல்லாத மற்றவர்களே இறைச்சியை உண்பதான தோற்றத்தையும் அவர்கள் கட்டமைத்து வரு கிறார்கள். இந்த அடிப்படையில்தான் வழக்கு களும் பதியப்பட்டு வருகின்றன.

புராண இதிகாச நாயகர்கள் இறைச்சி சாப்பிடுவது குறித்து ஏராளமான தகவல்கள் வேதங்களிலும், பிரமாணங்களிலும் காணப்  படுகின்றன. தவிர பிற்காலத்திய சமூகத்தில்  பல்வேறு இறைச்சிகள் மக்களின் அடிப்படை  உணவாக இருந்து வந்திருக்கிறது. சமீபத்தில்  “பசுவின் புனிதம்” என மொழி பெயர்க்கப்பட்டு  பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்தி ருக்கும் திமித் ஆப் தி ஹோலி கவ் (THE MYTH  OF THE HOLY COW) எனும் மகத்தான புத்த கத்தில் நமது சமூகத்தில் எப்படி அனைத்து  இறைச்சிகளும் உண்ணப்பட்டு வந்திருக்கி றது என்பது வேத, புராண இதிகாச ஆதா ரங்களோடு தரப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்திய வரலாற்று மரபில் புலால் எதிர்ப்பாளராக சித்தரிக்கப்படும் புத்தரே இறைச்சி உண்டதற்கான பல்வேறு தருணங்களை அங்கு தர நியாயம் சித்தரிப்ப தாக இப்புத்தகத்தின் ஆசிரியர் டி.என்.ஜா  விவரிக்கிறார். வைசாலியைச் சேர்ந்த உக்கா சேத்தி என்பவர் புத்தருக்கு இலந்தைப் பழக்  குழம்போடு, அரிசி அப்பமும், பன்றி இறைச்சி யும் கொண்ட விருந்து படைத்திருப்பதாக அச்செய்தி கூறுகிறது.  மேலும் மாட்டிறைச்சி என்பது முன்னு ரிமை பெற்ற விருந்துணவாக பிராமணர் களுக்கு இருந்ததாகவும், மாட்டிறைச்சி கிடைக்காதபோது மட்டுமே பிதுர்களுக்கு காய்கறிகள் படைக்கப்பட்டதாகவும் ஆபஷ்ப தம்ப தர்மசூத்திரத்திலிருந்து (II 8,19, 18-9) இப்புத்தகத்தில் மேற்கோள்காட்டப்படுகிறது.  இத்தகைய ஆய்வு நூல்கள் இறைச்சி யியல் பற்றி விரிவாக விளக்கம் தருவது ஒரு  பக்கம் இருப்பினும், இன்னாளில் இறை யுணர்வு கொண்டோரின் அன்றாட வழிபாட்டி யலுக்கும் பாராயணத்துக்கும் உரிய புனித நூல்களிலும் ஏராளமான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் இறையுணர்வு கொண் டோடர் மத்தியில் வடகலை வைஷ்ணவர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்களின் நிறுவனமான லிப்கோ பதிப்பகம் பேரும் புக ழும் வாய்ந்ததாகும். இந்துக்கள் குறிப்பாக பிரா மணர்கள் அன்றாடம் பாராயணம் செய்யத் தக்க விதத்தில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டத்தை திவ்ய மங்கள ஸ்தோத்ரத்துடன் 1962லேயே இந்நிறுவனம் பதிப்பித்துள்ளது. இப்புத்தகம் இன்றும் பல்வேறு பதிப்புகளை கண்டுவருகிறது என்ப திலிருந்து இது பரவலாக பிராமணர்களால் பின்பற்றி வரப்படுகிறது என்பதை அறிய லாம். ஏற்கனவே ஸங்கீதபீஷ்ம ஸங்கீத விமர்  சகாச்சார்ய, அபிநவ த்யாகப்ரஹ்ம கீர்த்தனா சார்ய, ஸ்ரீ உ.வே. சி.ஆர்.ஸ்ரீநிவாஸய்யங்கார் பி.ஏ., உரைநடையெனும் வசன நடையில் எழு திய வால்மீகி ராமாயணத்தின் தமிழ் வச னத்தை கிட்டத்தட்ட பதினைந்து பாகங்களாக  சென்னை ஹக்ஸ்லி பிரெஸ் நாற்பதுகளில் வெளியிட்டிருந்தது. இதில் உள்ள சுந்தர காண்டப்பகுதிதான் லிப்கோவின் பாராயணப் பதிப்பில் எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் ஸர்க்கம் 36ல் ஹனுமான் ஸீதையிடம் கணை யாழியைக் கொடுத்து ராமனைப் பற்றி  பிரஸ்தாபிக்கையில் ராமன் மது மாம்ஸங் களை விட்டுவிட்டதாகவும் வானப் பிரஸ்த ருக்குத்தகுந்த பழம் கிழங்கு முதலியவை களை ஸாயங்காலத்தில் புஜிக்கிறார் என்றும்  (பக்கம் 171) கூறுகிறார். 

எனவே பண்டைய உணவுப் பண்பாட்டி யலை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிட விரும்பும்  இந்துத்துவ அமைப்புகள் காலங்காலமாய் இறையுணர்வை மக்களிடம் கொண்டு செல்வதில் பெரும்பங்கினைக் கொண்டுள்ள லிப்கோ ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி சர்மா மற்றும்  கீர்த்தனாசார்ய ஸ்ரீ உ.வே. சி.ஆர். ஸ்ரீநிவா ஸய்யங்கார் ஆகியோரின் கருத்துக்களை உணர்வது உசிதமாகவும் சிலாக்கியமாகவும் இருக்கும்.  அடுத்த அம்சம் பிராமணர்கள் இறைச்சி  உணவை சமைப்பது குறித்த விமர்சனமாகும். இது உலகமயம், காலங்காலமாக செய்து வந்த  தொழிலையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டிருக்கும் நிதர்சனத்தை உணர்ந்திட மறுப்பதிலிருந்து வந்திருப்பதாகும். இறைச்சி யை அடிப்படை உணவாகக் கொள்ளாத ஏரா ளமான பல்வேறு சாதியினர் வெவ்வேறு வண்ண அட்டைகளுடன் அந்நிய நாடுகளில்  குடியேறி அந்தந்த இடத்திற்கு ஏற்ற உணவுப்  பண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இறைச்சியும் உள்ளடங்கும். இதற்கு  பெரிதாக விவரணம் ஒன்றும் தேவையில்லை. இந்தியாவிலேயே குறிப்பாக இறைச்சி பிரி யாணி என்பது அனைவரும் உண்ணக்கூடிய உணவாக முதலிடத்தில் இருந்து வருகிறது என்பதை ஸ்விகி, டன்ஸோ, ஜொமேட்டோ போன்ற நிறுவனங்கள் அவ்வப்போது கூறி வருவது பத்திரிகைகளில் செய்தியாக வெளி யிடப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரும்  பேதமின்றி இறைச்சியை தங்களது அடிப் படை உணவாகக் கொண்டுள்ளனர் என்பதை இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அதே தருணத்தில் அவர்கள் தாங்கள்  சமைப்பதிலும் இறைச்சியை தவிர்க்க முடி யாதவர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தங்களுக்கு ஏற்ற விருப்பமான உணவை  சமைப்பதில் எவ்வித அறமும் மீறப்பட வில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ள னர். இதில் இந்தியாவிலுள்ள இந்துக்களில் உள்ள அனைத்து சாதியினரும் அடங்குவர்.  சமையலுக்கேற்ற பாத்திரம் பண்டங்களை தயாரிக்கும் பிரஸ்டிஜ் குக்கர் நிறுவனத்தை அறியாதோர் இருக்க முடியாது. சுதந்திரப் போராட்ட வீரரும் ஐம்பதுகளில் நேருவின் மந்திரிசபையில் நிதியமைச்சராகவும் இருந்த  டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்களின் குடும்ப நிறுவனமாகும் இது. இவர் ஆச்சார அனுஷ்டான வைணவ பிராமணர் என்ப தோடு தமிழ்நாட்டில் தெய்வங்களின் படங் களை காலண்டர்களில் போட்டு மக்களிடம் எடுத்துச் சென்றதில் முன்னோடியாகவும் விளங்கியவர். இவரது பேரன் டி.டி.ஜெகந்நாதன் பிரஸ்டிஜ் நிர்வாகத்தை செம்மையாக்கியது குறித்து டிஸ்ரப்ட் அண்டு கன்குவெர் (DISRUPT AND CONQUER) எனும் ஆங்கில புத்தகத்தை எழுதி யுள்ளார். பெங்குவின் நிறுவனப் பதிப்பு இது.  இதில் இறைச்சி உணவை உண்பது மற்றும் சமைப்பது பற்றிய தகவல்களை அவர் தந்துள்ளார்.  அமெரிக்காவில் கார்னெல் பல்கலைக்கழ கத்திலும் சென்னை ஐஐடியிலும் பயிலும் காலத்திலேயே இறைச்சி உணவை எடுத்துக் கொண்டதோடு சமைக்கும் முயற்சியை மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். (பக்கம்  134) வீட்டிலேயே இறைச்சி உணவை சமைத்து  தன் குடும்பத்தாருக்கு பரிமாறுவதை பெருமை பொங்க அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மகன்களும் தந்தை இறைச்சியை சமைப்பதில் சிறப்பானவர் என்றும் தங்க ளுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் (பக்கம் 136) விவரித்துள்ளனர். எனவே பொது வாக இறைச்சி உண்பதும் சமைப்பதும் வெளி நாடுகளில் வசிக்கக்கூடிய அல்லது திரும்பிய  பிராமண குடும்பங்களில் பரவலாக பொருட் படுத்தாது இருக்கக்கூடிய வழக்கமாகும்.  வட மாநிலங்களில் குறிப்பாக வங்கம் பீகாரில் பிராமணர்களின் சமையலறையில் இன்றும் மீன் அன்றாடம் இடம் பெறுவதுண்டு.  எனவே இறைச்சி உண்பதை அறம் மீறிய  செயலாக இந்துத்துவ அமைப்புகள் சித்த ரித்து அன்னபூரணிக்கு எதிராக கிளர்ந்தெழு வது என்பது மரபு சார்ந்த உணவுப் பழக்கத்  திற்கு மட்டுமின்றி உணவு ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். தவிர புதுப்புது உணவு வகைகளை சமைப்ப திலும் அறிவதிலும் உண்பதிலும் அனைத்து  தரப்பினரிடத்திலும் குறிப்பாக பெண்கள் மத்தி யிலும் ஆர்வம் இருப்பதன் வெளிப்பாடுதான் ஊடகங்களில் வெளியாகும் சமையல் குறிப்பு களும், உணவு சம்பந்தப்பட்ட பிரத்யேக பத்திரி கைகளும், தொலைக்காட்சிகளில் இடம்  பெறும் சமையல் குறித்த விசேஷ நிகழ்ச்சி களும். எனவே இனி அன்னபூரணிகள் சமீ பத்தில் புவிசார்ந்த குறியீட்டினைப் பெற்றிட்ட  சிவப்பு எறும்பு சட்னியைக் கூட முயற்சிக் கக் கூடும். இவற்றையெல்லாம் எந்தக் கொம்ப னும் தடுக்க முடியாது, தடுக்கவும் விடக் கூடாது.