ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் தயாளன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சக்திவேல் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.