districts

img

எஸ்.எஸ்.எம். பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

திண்டுக்கல், ஜூலை 16- திண்டுக்கல் எஸ் எஸ் எம் அகாடமி மற்றும் மெட்ரிக்  பள்ளிகளின் சார்பில் பசுமை தினம் - கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பச்சை நிற உடை அணிந்திருந்தனர். மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பேச்சு  மற்றும் பாடல்கள் மூலம் இயற்கையை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தையும் பல்வேறு காய்கறி பழவகை களின் சிறப்புகள் பற்றி விளக்கினர். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் அனுசரிக்கப்பட்டது. காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர் மற்றும்  மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு நீர் ஊற்றினர். விழாவிற்கு கல்வி ஆலோசகர் முனைவர் சரவணன் தலைமை தாங்கினார். அனைத்து ஆசிரியர்களும் கலந்து  கொண்டனர். பொறுப்பாளர்கள் மதுமிதா, ஜெயா, குளோரி மற்றும் கலைவாணி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு களை செய்திருந்தனர்.