தேனி ,நவ.29- பெரியகுளம் அருகே தலித் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி குழந்தைகள் உட்பட குடும் பத்தினரை நடுத்தெருவில் நிறுத்திய அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி யுள்ளது . விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் சேகுவாரா ,இனி விடுதலையன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை கோரி புகார் அளித்தனர் . தென்கரை பேரூராட்சி,தெ.கள்ளிப்பட்டி ,தண்ணீர் துறை தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நல்லயன் மகன் முத்து என்பவர் வசித்து வந்தார் .பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகிறார் . இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி பெரியகுளம் நெடுஞ்சாலைத் துறை அதி காரிகள் ,காவல்துறையினர் உதவியுடன் முத்து வின் வீட்டை தரைமட்டமாக இடித்து விட்டனர் .இந்த வீட்டில் முத்துவின் மகன் இளையராஜா ,தனது மனைவி ,7 வயதிற்குட்பட்ட இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் .தற்போது சின்ன சிறு குழந்தைகளுடன் குடும்பமே நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர் .குழந்தை களின் பாடப் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இடிபாடுகளுக்குள் சிக்கி வீணா னது. குறிவைத்து இடித்து தரைமட்டமாக்கிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .பாதிக் கப்பட்டவர்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.