districts

img

நெல்லையில் கைத்தறி சிறப்பு கண்காட்சி

திருநெல்வேலி, ஆக.7- சுதேசி இயக்கத்தினை நினைவு கூரும் பொருட்டு கைத்தறி தொழிலின் முக்கி யத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர் களின் வாழ்க்கையை மேம்  படுத்தும் பொருட்டும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வரு கிறது.  8-வது தேசிய கைத்தறி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை யொட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் கைத்தறி துறை சார்  பில் சிறப்பு கைத்தறி கண் காட்சி நடைபெற்றது. இதனை  மாவட்ட வருவாய் அலு வலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.இதில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைத் தறி ஜவுளிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நெசவாளர் நல்வாழ்வு திட்ட உதவித்  தொகை, நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத்து டன் கூடிய  கடன் என 38 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 83 ஆயிரத்து 65 கடனுதவியாக வழங்க ப்பட்டது.இதில் நெல்லை கைத்தறி உதவி இயக்குநர் சங்கரேஷ்வரி, லெட்சுமி வெங்கடசுப்பிரமணியன், கைத்தறி அலுவலர், அலு வலக பணியாளர்கள், நெச வாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்கள் கலந்து கொண்ட னர்.

;