districts

மதுரை மேலூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: 1350 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரை, அக்.8- மதுரை மேலூர் ஒன்றியம் மற்றும்  நகராட்சி பகுதி மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு முகாம்  மேலூர்  அரசு  கலைக் கல்லூரியில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.இதில்  1350 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியால் மாவட்ட  ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், பல்  வேறு துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு டன் மதுரை மாவட்டம் முழுவதும் மாற்  றுத்திறனாளிகள்  நல்வாழ்வு சிறப்பு  முகாம் நடைபெற்று வருகிறது. மேலூர்   அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் புதிய அட்டை மற்றும் நலத்  திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளி களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், டி.ஆர்.ஒ சக்தி வேல் மற்றும் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச் சந்திரன், துணை அலுவலர் சுபாஷ்,  மற்றும்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன்,  மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், மாற்றுத்திறனாளி சங்க  மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கே. தவமணி, மாவட்டச் செயலாளர் வி.முரு கன், மாநகர் மாவட்டச் செயலாளர் பால முருகன் ,மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிபாசு, திமுக நகராட்சி சேர்மன் முமகதுயாசின், ஏ.வள்ளாலபட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன் உட்பட  பலர்   கலந்துகொண்டனர். மேலூர் பிடிஒ, தாசில்தார், மற்றும்  தன்னார்வலர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும்  அரசுத்துறை அதிகாரிகள், மருத்து வர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து பணியாற்றினர்.   இந்த முகாமில் 1350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட னர். இந்த முகாமில் மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை, மறு மதிப்பீடு அட்டை, தனித்துவ அடை யாள அட்டை,  உதவித்தொகை, இலவச பேருந்து, ரயில் பயண சலுகை  முதல மைச்சர் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் , வேலை வாய்ப்பற்றோர்க்கு நிவாரண தொகை, ஆவின் முக வர்கள் நியமனம் மற்றும்  பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் உபயோகப் படுத்தும் கிட், மூன்று சக்கர சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன.