நாகர்கோவில், ஏப்.24- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது. புத்தகக் கண்காட்சியை பள்ளி தலைமையாசிரியர் அருட்தந்தை சைமன் ராஜ் தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் அருள், அமலதாஸ் சேவியர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கண்காட்சியை காண வந்த மாணவர்கள் ஆர்வமாக புத்தகத்தை வாங்கி செல்கிச் சென்றனர். மேலும் இதில் பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் டோமினிக் ராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் கவிஞர் குமரி எழிலன், பள்ளியின் நூலகப் பொறுப்பு ஆசிரியர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.