districts

img

14 கோடி ஏழைகள் பாதிப்பு சோனியா காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்படாததால் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைக ளைப் பெற முடியாமல் தவித்து வருவ தாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையில் குற்றம் சாட்டி யுள்ளார். இந்திய மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியின் பகுதியாக 2013 செப்டம்பர் மாதம் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) அமல்படுத்தப்பட்டது.   இந்த சட்டத்தின்படி பொது விநி யோக முறையின் (TPDS) கீழ் 75 சதவீத கிராமப்புற மக்களும், 50 சதவீத நகர்ப்புற மக்களும் மானிய விலையில் உணவு தானியங்களை பெற்று வருகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி சுமார் 81.35 கோடி இந்தியர்கள் இந்த சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். 2021 மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தப்படாததால், பயனாளிக ளுக்கான ஒதுக்கீடும் 2011 மக்கள் தொகை  கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. இத னால் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைக ளைப் பெற முடியாமல் தவித்து வரு கின்றனர். இது அம்மக்களின் ஊட்டச் சத்து மற்றும் உணவு உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை கணக் கெடுப்பை விரைவில் முடிப்பதற்கு அர சாங்கம் முன்னுரிமை அளிக்க வேண் டும். மேலும், தகுதியான அனைத்து நபர்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக் கப்பட்ட சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம். உணவுப் பாது காப்பு ஒரு சலுகை அல்ல. அது ஒரு அடிப் படை உரிமை என்று சோனியா காந்தி மக்க ளவையில் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெ டுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இந்தியா சுதந்திர மடைந்த பிறகு இவ்வாறு மக்கள்  தொகைக் கணக்கெடுப்பு எடுக்காமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.