districts

மதுரை முக்கிய செய்திகள்

மின் கட்டண உயர்வை  ரத்து செய்திடுக! சிறு, குறு தொழில் சங்கம் வலியுறுத்தல்
விருதுநகர், அக்.9- விருதுநகர் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தின்  கூட்டம் செயலாளர் குருசாமி தலைமையில் நடை பெற்றது.  இதில், விருதுநகர் சிட்கோ தலைவர் ஜவஹர், சிவகாசி  காலண்டனர் அசோசியேசன் தலைவர் ஜெய்சங்கர், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தலைவர் வசந்தன், இராஜ பாளையம் அசோசியேசன் தலைவர் கண்ணன், ஸ்பின்னிங் மில் சங்க உப தலைவர் ராம்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பின்பு, மின் கட்டண உயர்வு தொடர்பான 5 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மேலும், மின் கட்டண உயர்வைக் கண்டித்து மின் நுகர்  வோர் அமைப்பு சார்பில் அக்டோபர் 16 அன்று நடை பெறும் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய் துள்ளனர்.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சுழி, அக்.9- திருச்சுழி அருகே உள்ள மேற்கு காளையார் கரிசல்  குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர், தனது இடத்தை நான்கு மால்  அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி யிடம் பலமுறை மனு அளித்துள்ளார்.  ஆனால், பாலமுரளி ரூ.3ஆயிரம் லஞ்சமாக கொடுத்  தால் மட்டுமே அளக்க வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கரி சல்குளம் கிராமப் பகுதியில் மறைந்திருந்தனர். இந்நிலை யில், விவசாயி பாலகிருஷ்ணன், விஏஓ பாலமுரளியிடம் இரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும்  களவுமாக பாலமுரளியைப் பிடித்து கைது செய்தனர்.

அக்.14ல் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி 

சிவகங்கை, அக்.9-  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதி வண்டி போட்டிகள் அக்டோபர் 14 அன்று காலை 6 மணி யளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா  அஜித் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13  வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும்,  17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவி கள் தங்களது சொந்த மிதிவண்டிகளை கொண்டு வரு தல் வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி களை கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே உபயோ கப்படுத்தப்பட வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ்  சைக்கிள் அனுமதிக்கப்படமாட்டாது.  மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி  தலைமை ஆசிரியிடமிருந்து வயது சான்றிதழ் தனித்தனி யாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும்.  முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.2  ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறு பவர்களுக்கு தலா ரூ.250/-மும் பரிசுத்தொகை வழங்கப்படும்.  போட்டியானது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாக மைதானத்தின் சுற்றியுள்ள பகுதி களின் வழியே சென்று, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தின் முன்பு முடிவடையும்.

ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டி ஒட்டிய  மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி கைது காவல்துறையை கண்டித்து சாலை மறியல்

மதுரை, அக்.9- மதுரையில் புறநகர் தமிழ்  நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் அக்  டோபர் 10 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 10 மணி அளவில் உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய இடங்  களில் 100 நாள் வேலை  திட்டத்தை மாற்றுத்திறனாளி களுக்கு வழங்காமல் உள்ள சம்பள பாக்கியினை வழங்  கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்  டம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், சங்கத்தின் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் குட்டி ராஜா ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டிகளை டி.கல்லுப் பட்டி முழுவதும் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவரொட்டி ஒட்டி யை ஒட்ட விடாமல் தடுத்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.  இதனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம்  சார்பில் டி.கல்லுப்பட்டியில் சாலை மறியல் நடைபெற் றது. மறியலில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் டி. கல்லுப்பட்டி ஒன்றியச் செய லாளர் வி.சமயன், மாற்றுத் திறனாளிகள் சங்கக் மாவட்  டச் செயலாளர் வீ.முருகன்,  ஒன்றியக் குழு பி.ஆறுமுகம்,  சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.அரவிந்தன், மாவட்டக் குழு உறுப்பினர் மணிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெத்தவநல்லூர் மாயூரநாதசாமி கோவில் நிலத்தை மீட்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இராஜபாளையம், அக்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகர் குழு கூட்டம் நகர்  குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது.  கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், நகரச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில், இராஜபாளையம் பெத்தவ நல்லூர் மாயூரநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 3.50 ஏக்கர் நிலம், 2018  மற்றும் 2022 ஆண்டுகளில் என்.ஏ.ராமச் சந்திர ராஜா கல்வி தர்ம டிரஸ்ட் நிர்வாகி  என்ற பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளது.  இதில் அன்னப்பராஜா பள்ளிக்கு எதிரே  இருந்த மைதானம் அனைத்து மக்களும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். அந்த மைதானத்தை பள்ளி நிர்வா கம் தனது பெயருக்கு மாற்றி உள்ளது. மேலும் இதே கோயில் நிலத்தில் சாந்திஸ்தல் என்ற பெயரில் நினைவிடம் ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர். எனவே, தமிழக அரசு மாயூரநாத சுவாமி கோவில் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தோடு மாற்றப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மேலும்  கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு உத வியாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக கோவில்  நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு  பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.