திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு ஆத்துப்பட்டி பிரிவில், ஆத்துார் கூட்டுறவு கலை-ம் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 75.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கூடுதல் பதிவாளர் -மேலாண்மை இயக்குநர் கோ.க.மாதவன், கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மு.மகேஸ்வரி முருகேசன் , ஒன்றியச் செயலாளர் முருகேசன், சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, பி டி ஓ தட்சிணாமூர்த்தி, கூட்டுறவு கலைக் கல்லூரி மேலாண்மை இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.