சிவகாசி, மார்ச் 14- “போதையற்ற தமிழ்நாடு“ எனும் முழக்கத்துடன் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தி வருகின்றனர். சிவகாசியில் பேருந்து நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகரச் செயலாளர் மரியராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஜெய பாரத் விளக்கிப் பேசினார். சிவ காசி தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஜி.அசோகன் வாழ்த்துரை வழங்கினார். சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பதாகை யில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். முடிவில் மாவட்ட பொரு ளாளர் பி.கணேசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பட்டாசு தீப் பெட்டி சங்க மாவட்ட பொருளாளர் கே.முருகன், சாலை போக்கு வரத்து சங்க நகர தலைவர் ஆர்.சுரேஷ்குமார், வாலிபர் சங்க முன் னாள் மாவட்ட செயலாளர் பி.பால சுப்பிரமணியன், மாதர் சங்க நகர தலைவர் அன்னலட்சுமி, நகர்க்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், சர வணன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.