சிவகங்கை,ஜன.13- சிவகங்கை மாவட்டம் டி. புதூர் ஆக்ஸ்வர்ட் மேல்நிலைப்பள்ளி பொ துத்தேர்வில் தொடர்ந்து 100 சதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவி சுசானா 600-க்கு 596 மதிப்பெண் எடுத்துள்ளார். மாணவி அபராஜிதா 583 மதிப்பெண்களும் ஐஸ்வர்ய லட்சுமி 580 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் சசிதா 500க்கு 494 மதிப்பெண்களும் , ஹரிணி 491 ,காவியா 490 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் சிறப்பு பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி பிரத்திகா, குடியரசு தின விழா மாநில அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலி டம் பெற்று தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் மூன்றாவது இடம் பெற்று வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளியின் செயலர் -தாளாளர் சியாமளா வெங்கடேசன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.