districts

img

வாலிபர் சங்கத்துக்கு சசி தரூர் வாழ்த்து மவாசோ ஸ்டார்ட்அப் விழாவிற்கு வாலிபர் சங்கம் அழைப்பு

புதுதில்லி, பிப்.19- காங்கிரஸ் எம்பி சசி தரூரை மவாசோ என்ற ஸ்டார்ட்அப் விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைத்துள் ளது. சங்கத்தின் அகில இந்திய செயலா ளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம், மத்திய குழு உறுப்பினர் எம்.ஷாஜார் மற்றும் கேரள மாநில செயலாளர் வி.கே. சனோஜ் ஆகியோர் தில்லியில் உள்ள தரூரின் இல்லத்திற்குச் சென்று அழைப்பிதழை வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலையீட்டையும், தன்னை அழைக்க விருப்பம் தெரிவித்ததையும் சசி தரூர் பாராட்டியதாகவும், வளர்ச்சி விசயத்தில் அரசியலைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் தரூர் கூறியதாகவும், ஏ.ஏ. ரஹீம் ஊடகங்களிடம் தெரிவித்தார். மவாசோ விழா மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெறும். இரண்டு நாட்களிலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுக்கான பயணம் காரணமாக மவாசோ நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று கூறி தரூர் தனது சிரமத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். எல்டிஎப் அரசுக்கு பாராட்டு அண்மையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் கேரள  தொழில் வளர்ச்சியை பாராட்டி சசிதரூர் கட்டுரை எழுதியிருந்தார். காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தனது நிலைப்பாட்டை சசிதரூர் உறுதிப்படுத்தினார்.  இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பி டத்தக்கது.