கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை மருத்துவக் கல்லூரி முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன் துவக்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் பலரும் கையெழுத்திட்டு தங்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.