districts

img

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி,  ஆக. 23 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நுழைவு வாயில் அருகே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலில் ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக மருத்துவர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் தினமும் செல்கிறார்கள். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை.  இந்த கழிவுநீர் மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள கழிவறையில் இருந்து கிழே இறங்கும் பைப் லைன் உடைப்பில் இருந்து கசிவு ஏற்பட்டு வெளியாவதாக தெரிகிறது. இத னால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.