districts

img

மூத்த தோழர் எஸ்.லெட்சுமணன் காலமானார்

மதுரை,நவ.9- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாந கர் வடக்கு- 1 ஆம் பகுதிக்  குழு விளாங்குடி அண்ணா நகர் கட்சி கிளையின் மூத்த தோழர் எஸ் லெட்சு மணன் (வயது 96) அவர்கள்  நவம்பர் 9 புதனன்று கால மானார் தோழர் லெட்சுமணன் பஞ்சாலை தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவக் கியவர் . அவசரநிலை கால கட்டத்தில் மூத்த தலைவர்  கே.பி.ஜானகியம்மாள் உள்  ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்களுடன் பணி யாற்றியவர் . வடக்கு ஏரியா கமிட்டி விளாங்குடி அண்ணா நகர் கிளையின் முதல் கிளைச்  செயலாளராக திறம்பட செயல்பட்டவர். மார்க்சிஸ்ட்  கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கெ டுத்தவர். ஆறுமாத காலம்  சிறை தண்டனை அனுப வித்தவர். தோழர் லெட்சுமணன் அவர்களுக்கு இரண்டு மகன்  கள், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் எல்.ஸ்டாலின் அண்ணாநகர் கட்சி கிளையின் செயலாள ராக செயல்பட்டு வருகிறார். மனைவி கடந்த சில ஆண்டு களுக்கு முன்னர் காலமா னார். தோழர் லெட்சுமணனின் மறைவு செய்தியறிந்து கட்சி யின் மாநகர் மாவட்ட செய லாளர் மா கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.  விஜயராஜன்,  மாவட்டக்குழு உறுப்பினரும் மதுரை மாநகர துனை மேயருமான தி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், ஜெ. லெனின்,சசிகலா, பகு திக்குழு செயலாளர் வி கோட்டைச்சாமி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பி னர்கள் க.திலகர், பா பழ னியம்மாள், தீக்கதிர் அச்சக மேலாளர் பாண்டியராஜன் மற்றும் தோழர்கள் மாலை யணிவித்து அஞ்சலி செலுத்  தினர்.