விருதுநகர், அக்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் குருசாமி (82) வயது முதிர்வு காரணமாக காலமானார். விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவராக இருந்தவர் குருசாமி. இவர் நீராவித்தெரு கிளையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வயோதிகம் காரணமாக புதனன்று மாலை காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.பால சுப்பிரமணியன், நகர் செயலாளர் எல்.முருகன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.