செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் பயண நேரம் குறைப்பு
மதுரை, நவ.16- செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848) பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 19 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக நண்பகல் 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 05.10 மணிக்கு பதிலாக மாலை 04.25 மணிக்கு 45 நிமிடங்கள் முன்னதாக சென்று சேரும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெரியகுளம் நிலமோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது
தேனி, நவ.16- பெரியகுளம் வட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு நிலத்திற்கு முறை கேடாக பட்டா வழங்கி மோசடி செய்த வழக்கில் அப்போ தைய பெரியகுளம் வட் டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் வட்டம் வட வீரநாயக்கன்பட்டி, தாம ரைக்குளம், கெங்குவார் பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலத்தில் ‘அ’ பதிவேட்டில் திருத்தம் செய்து, வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலர் அன்னப்பிர காஷ் உள்ளிட்ட சில தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கி மோசடியில் ஈடுப்பட்டதாக அப்போதைய பெரியகுளம் வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். இந்த மோசடி குறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு பெரியகுளம் கோட்டாட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், அப்போ தைய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர் கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை வட் டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவை யர்கள் பிச்சைமணி, சக்தி வேல், வடவீரநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலு வலர் சுரேஷ், வடபுதுப்பட்டி யைச் சேர்ந்த அன்னப்பிர காஷ் உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்த னர். பின்னர், இந்த வழக்கு விசாரணை தேனி சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் மீது விசா ரணை நடத்தி வரும் சிபி சிஐடி போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நில அளவையர் பிச்சைமணி, நில அளவை பிரிவு தற்கா லிக பணியாளர் அழகர், வட புதுப்பட்டியைச் சேர்ந்த அன்னப்பிரகாஷ் ஆகிய 3 பேரை கடந்த 2022 பிப்ரவரி 3 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல், வருவாய் துறை உதவியா ளர் செல்வராஜ் ஆகிய 3 பேரை கடந்த மே 5 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பணிநீக் கம் செய்யப்பட்ட வட்டாட்சி யர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கிருஷ்ண குமாரை நீதிமன்றக் காவ லில் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி கோபி நாதன் உத்தரவிட்டார்.
விருதுநகரில் முதல் புத்தகத் திருவிழா இன்று துவங்குகிறது அறிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்பு : ஆட்சியர் தகவல்
விருதுநகர், நவ.16- விருதுநகரில் இன்று ( 17.11.22) துவங்கும் புத்தகத் திருவிழாவினை வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு -வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கள் துவக்கி வைக்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்ப னையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து நவம்பர் 17 முதல் 27 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. துவக்க விழாவில், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்கு கள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்க ளின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளை யாடுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நவம்பர் 18இல் டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார் எழுதிய அழகாக ஆரம்பிக்கலாங்களா? என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியும், எழுத்தறிவித்த வர்கள் என்ற தலைப்பில் த.ஸ்டாலின் குண சேகரன் கருத்துரையும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, நினைவின் சித்திரங்கள் என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்துரையும் நடைபெற உள்ளது. நவம்பர் 18 இல் இலக்கியமும், வரலாறும் என்ற தலைப்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேச னின் கருத்துரையும், வாழ்விற்கு துணை நிற்பது - உறவே நட்பே, என்ற தலைப்பில் திண் டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் சிறப்பு பட்டி மன்றமும் நடைபெறுகிறது. நவம்பர் 20 இல், புத்த்கங்களின் நோக்கம் அன்பை வளர்ப்பதா? அறிவை பெருக்குவதா? என்ற தலைப்பில் மு.இராமச்சந்திரனின் சிறப்பு பட்டிமன்றம், நவம்பர் 21 இல், திரைக்கலைஞர் எங்கே போகிறோம் என்ற தலைப்பில் திரைப்பட இயக்கு நர் சமுத்திரக்கனியின் கருத்துரையும், இலக்கி யம் - ஒரு மானுட துளிர்ப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சிறப்புரை யும், நிற்க அதற்குத் தக என்ற தலைப்பில் நகைச்சுவை நாவலர் மோகன சுந்தரத்தின் கருத்துரையும் இடம்பெறுகிறது.
நவம்பர் 22 அன்று பழைய கடல் புதிய அலை என்ற தலைப்பில் ஈரோடு மகேசின் கருத்துரையும், செல்வம் சிலருக்குண்டு என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரை யும் நடைபெற உள்ளது. மேலும், நவம்பர் 23இ ல் வாழ்க்கை என்பது யாதெனில் என்ற தலைப்பில் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத்தின் கருத்துரையும், கலையும், இலக்கியமும் என்ற தலைப்பில் கவி ஞர்.கவிதா ஜவஹரின் கருத்துரையும் நடைபெறுகிறது. நவம்பர் 24 இல் தமிழின் உரம் - அறம் என்ற தலைப்பில் திரைப்பட நடிகர் மல்லூரி யின் கருத்துரை, யாரைத்தான் நம்புவதோ? என்ற தலைப்பில் முனைவர்.சுந்தர ஆவுடை யப்பனின் கருத்துரையும் இடம்பெறுகிறது. நவம்பர் 25 இல், இலக்கியமே வாழ்க்கை என்ற தலைப்பில் முனைவர் கு.ஞானசம்பந்த னின் கருத்துரையும், கைப்பொருள் தன்னில் - மெய்பொருள் கல்வி என்ற தலைப்பில் விருது நகர் டி.எஸ்.பி முனைவர்.ஆ.மணிவண்ண னின் கருத்துரையும், நவம்பர் 26இல் கற்பதால் என்ன பயன்? என்ற தலைப்பில் சுகி சிவம் கருத்துரை, எதை படிப்பது? எப்படி படிப்பது? என்ற தலைப்பில் கவி ஞர். மனுஷ்யபுத்திரனின் கருத்துரை நடைபெறு கிறது. நவம்பர் 27இல் வானம் உங்கள் கையில் என்ற தலைப்பில் தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்க பாண்டியனின் கருத்துரையும் நடைபெற உள்ளது. எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொது மக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவி யர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று ஆட்சி யர் கேட்டுக்கொண்டுள்ளார்.
138 அடியை எட்டுகிறது முல்லைப் பெரியாறு ஆணை
தேனி, நவ.16- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை விரைவில் 138 அடியை எட்டுகிறது. கேரளாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதி கரித்து நீர் மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி 137.60 அடியாக உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்து வருவ தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அணைக்கு 965 கன அடிநீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடித்து வருகிறது. தொடர் மழையால் நீர்வரத்து 1899 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1866 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 178 கனஅடிநீர் வருகிறது. 40 கன அடி நீர் பாசனத்திற்கும், 138 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.51 அடியாக உள்ளது. 127 கனஅடிநீர் வருகிறது. 30 கன அடி நீர் பாசனத்திற்கும், 97 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. மழையளவு: தேக்கடி 0.4, மஞ்சளாறு 3, சோத்துப் பாறை 2, போடி 2.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
மின்சாரம் தாக்கி தீப்பெட்டி ஆலை, ஜவுளி கடையில் 2 பேர் பலி
திருவில்லிபுத்தூர்.நவ.16- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே மேல தொட்டிய பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 30). இவர் மல்லி அருகே ஒரு பட்டாசு ஆலையை குத்தகை எடுத்து நடத்தி வருகிறார் .இதில் குருசாமியின் தாயார் நைனா அம்மாள் (வயது 50) அங்கே தங்கி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை நைனாம்பாள் கழிவறைக்கு சென்ற போது அங்கே அருந்து கிடந்த மின்சார வயரை மிதித்தார். அப்போது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார் .மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டி யத்தில் வசிப்பவர் மோகனசுந்தரம் (வயது 42), இவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் ஜவுளிக்கடையில் பணி புரிந்து வந்தார். விடுமுறையில் சுந்தரபாண்டியத்திற்கு வந்த இவர் தனது வீட்டில் வெந்நீர் போடுவதற்காக வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து மின்சாரம் மோகனசுந்தரத்தின் மீது பாய்ந்தது அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செண்பகத்தோப்பிற்கு மக்கள் செல்ல தடை
திருவில்லிபுத்தூர், நவ.16- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள காட்டாறு, சிற்றாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து செண்பகத் தோப்பு பேயனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வனதேவதை கோவில் களுக்கு செல்லும் மக்கள், நீர்வீழ்ச்சியில் குளிக்கச் செல்லும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் செல்வர். இந்நிலையில் திருவில்லிபுத்தூர் வனப்பகுதி யில் தோப்புப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் தடையை மீறி செல்லக்கூடாது என்றும் மீறிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்ச ரித்துள்ளது. செண்பகத்தோப்பு நுழைவாயிலில் உள்ள சோதனைசாவடி மூடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களக்காட்டில் குளிக்க தடை
திருநெல்வேலி, நவ. 16- களக்காடு தலையணையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் புதன்கிழமை காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் புதன்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
கூலி உயர்வு கோரி சத்திரப்பட்டியில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
இராஜபாளையம், நவ.16- இராஜபாளையம் அருகே மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கக் கோரி நவம்பர் 16 புதனன்று ஒரு நாள் அடைளான வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் மற்றும் அய்யனா புரம் பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி பிரதானமாக நடைபெறுகிறது. இத் தொழிலில் அப்பகுதியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர் களுக்கு சொந்தமாக உள்ள 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தறிகளில் பல்லாயிரக்க ணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 3 ஆண்டுகளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மேலும் தொழிலுக்கு தேவையான உதிரி பாகங்களின் விலையும், தறி பராம ரிப்பு செலவும் இரு மடங்கு உயர்ந்து விட்ட தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித் தனர். எனவே விலை உயர்வுக்கு ஏற்ப கூலி யை உயர்த்தி வழங்க கோரி, கடந்த மாதம் மருத்துவ துணி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இவர்களது கோரிக்கைக்கு உற்பத்தியாளர்கள் தரப் பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கூலி உயர்வு கோரிக்கைக்கு முறையான பதிலளிக்காத உற்பத்தியா ளர்களை கண்டித்தும், செலவுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கக் கோரியும் சிறு குறு உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனை தொடர்ந்து சங்கர பாண்டியபுரத்தில் புதன்கிழமை பிற்பகலில் உரிமையாளர்கள் மகா சபை கூட்டம் நடை பெற்றது. விரைவில் தங்களது கூலி உயர்வு கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், வரும் 23 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அய்யப்பன் கோவில் நடைதிறப்பு தமிழக-கேரள போலீசார் ஆலோசனை
தேனி, நவ.26- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த இருமாநில போலீசாரின் ஆலோசனைக்கூட்டம் புதன் கிழமை தேக்கடியில் நடைபெற்றது. கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களை சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். தற்போது சபரி மலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், கோவிலுக்குச் சென்று திரும்பும் பக்தர் களுக்கு இருமாநில எல்லையான குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட போலீசார் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்தில், தற்போது சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலை யில், பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்கு வரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்ப கோவிலுக்கு செல்பவர்களுக்கு கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதை தவிற்பதற்கான தீர்வு குறித்தும், அவசர மெடிக்கல் கேம்ப் அமைப்பது உள் ளிட்டவைகள் அதிகாரிகள் பேசினர். நிகழ்ச்சியில் தமிழகம் சார்பாக தேனி மாவட்ட எஸ்பி பிரவின் உமேஷ் டோங்ரே, உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, கூடலூர் ஆய்வாளர் பிச்சைப்பாண்டியன், போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை கண்ணன், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாகோஸ், ஏஎஸ்பி சுனீஷ்பாபு, மற்றும் இருமாநில வருவாய் துறையினர், கேரள மருத்துவத்துறை யினர், குமுளி பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.