சின்னாளபட்டி, மார்ச் 11- மாநில அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி கள் மார்ச் 12, 13 தேதிகளில் கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 25 மாவட்டங்களை சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற் கின்றனர். இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி சார்பில் தேர்வாகியுள்ள வீரர்களுக்கான பாராட்டு விழா சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாஸ்டர் பிரேம்நாத், காந்திகிராம பல்கலை., புவி அறிவியல் துறை தலைவர் குருஞானம் மற்றும் பெற் ்றோர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் திருப்பதியில் நடைபெறும் தென் இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்று மாஸ்டர் பிரேம்நாத் கூறினார்.