தேனி, ஆக.3- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு இரண்டாம் கட்ட முகாம் கள் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்க னூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடை பெறும் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண் ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட் டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டது. முதற் கட்ட முகாம் பெரியகுளம், உத்தமபாளை யம் ஆகிய பகுதிகளில் 24.07.2023 முதல் 4.8.2023 வரையிலும், நாளை மறுநாள் முதல் இரண்டாம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05.08.2023 முதல் 16. 8.2023 வரை நடைபெறவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற் கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகி யவற்றினை 01.08.2023 முதல் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
ஆண்டிபட்டி வருவாய் வட்டத்தில் ஆண்டிபட்டி பிட் 1,பிட் – 2, பாலக் கோம்பை, சித்தார்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கடமலைக்குண்டு கணவாய்பட்டி, கோத்த லூத்து, கொத்தப்பட்டி, கோவில்பட்டி, குன் னூர், மரிக்குண்டு, மேகமலை, மொட்ட னூத்து, மயிலாடும்பாறை பழைய கோட்டை, புள்ளிமான் கோம்பை, ராஜ தானி, ராமகிருஷ்ணாபுரம், சண்முக சுந்தரபுரம், தேக்கம்பட்டி, தெப்பம்பட்டி, திம்மரசநாயக்கனூர் பிட்-1,பிட் -2,வள்ளல்நதி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறும் . போடி வட்டத்தில் அகமலை, பி.அம்மா பட்டி,பி.மீனாட்சிபுரம், போடி (வடக்கு மலை), போடி (நகரம்), போடி (மேற்கு மலை) பூதிப்புரம், டொம்புச்சேரி, கோடா ங்கிபட்டி, கூளையனூர், கொட்டகுடி, மேலசொக்கநாதபுரம் , ராசிங்காபுரம், சிலமலை உப்புக்கோட்டை ஆகிய கிரா மங்களில் நடைபெறும் . தேனி வட்டத்தில் அல்லிநகரம், கோவிந்தநகரம், ஜங்கால்பட்டி, கொடு விலார்பட்டி, கோட்டுர் , பூமலைக்குண்டு, சீலையம்பட்டி தாடிச்சேரி, தப்புக்குண்டு, ஊஞ் சாம்பட்டி, உப்பார்பட்டி, வீரபாண்டிஆகிய வருவாய் கிராமங்களில் இரண்டாம் கட்ட மாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெற உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பி டப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பப் பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரி பார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள் ளப்படுகிறது.