தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வாரியத்தின் மூலம் இரண்டாவது மாவட்ட வாழ்விட மேம்பாட்டு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மதசூர் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. இக்கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ,மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ,காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து ,திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேலு ,திட்ட செயலாக்க கோட்ட நிர்வாக பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி நிர்வாக பொறியாளர் புஷ்பராஜன், இளநிலை பொறியாளர் பாஸ்டின் விக்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.