அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க முன்னாள் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே..குணசேகரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருவாடானை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பில் ஆர்.சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் ஏ. நாகநாதன், தாலுகா குழு செயலாளர் கே.ஜெயகாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.