திருவில்லிபுத்தூர்,மே 4- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூரில் விதைகள் சிலம்பம் அகாடமி சார்பில் தமிழக மக்கள் நன்மைக்காகவும். பேரிடர் மீட்பு பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 30 நிமிடம் மண் பானையில் யோகாசனத்தில் பத்மாசன நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தனியார் கல்லூரி கலை யரங்கத்தில் வைத்து நடைபெற்றது. 150 மாணவர்கள் மண்பானை மீது யோகாச னம் செய்து சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்ததை சென்னை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்டு குழுவினர் அங்கீகரித்தனர்.மேலும் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், கோப்பைகளையும் வழங்கினர்.