districts

மதுரை முக்கிய செய்திகள்

பாறை குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

வேடசந்தூர், டிச.30-  வேடசந்தூர் அருகே பாறை குழி தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் உசிலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி - லட்சுமி தம்பதி யின் மகன் கேசவன்(வயது 12) இவர்  உசிலம்பட்டி அரசு மேல் நிவைபள்ளியில் 7ம்  வகுப்பு படித்து வந்தார்.  பள்ளி அரையாண்டு தேர்விற்கு விடுமுறை விடப் பட்டுள்ளதால் தனது நண்பர்கள் 10 பேருடன் வெள்ளி யன்று இதே ஊருக்கு அருகே உள்ள புலிகாட்டு பாறை குழியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்கச் சென்றுள்ளார்.  அனைவரும் நீருக்குள் இறங்கி நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். இதில் கேசவன் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினான். வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு பாறை இடுக்கிவ் சிக்கியிருந்த கேசவனனின் உடலை மீட்டு எரியோடு போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவனின் உடலை வேடசந்தூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

வேடசந்தூர், டிச.30-  வேடசந்தூர் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வைவேஸ்புரத்தைச் சேர்ந்தவர் மல்லநாயக்கர் என்ப வரது மனைவி காமக்காள்(65 வயது) இவருக்கு காது கேட்காது.  இவர் தோட்டத்து வேலைக்கு செல்வதற்காக திண்டுக்கல் -கரூர் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள் ளார். அப்போது மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே காமக்காள் இறந்தார். இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து காமக்காளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பிவைத்தனர்..இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இராமேஸ்வரம் - மதுரை  சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

மதுரை, டிச. 30-  பரமக்குடி - சத்திரக்குடி ரயில் நிலையங்களுக்கி டையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதன் காரணமாக ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இராமேஸ்வரம் மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ் வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12  மணிக்கு  புறப்படும். பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தற்போது இராமேஸ்வரம் - மதுரை  ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்கு புறப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடையின்  மேற்கூரையை உடைத்து பொருட்கள் திருட்டு

சாத்தூர், டிச.30- சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரராஜ் (58). இவர் 4 வழிச் சாலை அருகே ஹார்டு வேர் கடை நடத்தி வருகிறார்.  அதன் அருகில் வெங்கடா சலப்புரத்தைச் சேர்ந்த அழகுராஜ் என்பவரும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் இருவரும்  வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள் ளனர். மறுநாள் காலை மீண்டும் வந்து கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே  இருந்த பொருட்கள் திருடு போனது  கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து  சாத்தூர் நகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து தடையவி யல் நிபுணர்கள்  சோதனை மேற்கொண்டனர். மேலும்,  விருதுநகரில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப் பட்டு சோதனை நடத்தினர்.

தோட்டத்தில் இருந்த  400 கிலோ வெங்காயம் திருட்டு 

காரியாபட்டி, டிச.30- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாசர்புளி யங்குளத்தில் தோட்டத்தில்  வைக்கப்பட்டிருந்த 400 கிலோ  வெங்காயம் மற்றும் தார்ப்பாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். காரியாபட்டி அருகே உள்ள நாசர்புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(41). இவர் 2 ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தார். அதை  அறுவடை செய்ததில் 400 கிலோ வெங்காயம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அதை தோட்டத்தில் குவித்து வைத்து இரு தார்பாய்களால் மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை வந்து பார்த்த போது, வெங்காயம் மற்றும் தார்பாய்களை காண வில்லையாம். எனவே, இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முகாம்

மதுரை, டிச. 30-  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று, மருத்துவத் தகுதியின்மையினால் விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் இறப்பின் காரணமாக (வாரிசு) குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் முகமாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி - 2 ஆம் தேதி துவங்கி மார்ச் - 20 ஆம்  தேதிக்குள் இப்போக்குவரத்துக் கழகத்தின் மதுரை , திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களை சேர்ந்தவர்கள்  மதுரை தலைமையகம் , திண்டுக்கல் - 1 கிளை , தேனி கிளை, விருதுநகர் தலைமையகம் மற்றும் திருவில்லிப்புத்துார் கிளை ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து நேரில் ஆஜராகி ஒப்பமிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.  அதே போல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

சிறைக்காவலர்  மாரடைப்பால் மரணம்

மதுரை, டிச. 30:- மதுரை மத்தியச்சிறையில்  பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். மதுரை மத்தியச் சிறையில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்தவர் சரவணன்(40). இவர் வெள்ளியன்று  மத்தியச்சிறையில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக காவலர்கள் சிறை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.  அங்கு முதலுதவிக்குப் பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள்,  வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து அவரது சடலம் உடற் கூராய்விற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்தப் புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல்துறை  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

மதுரை சிறையில் பதுக்கி வைத்த கஞ்சா பறிமுதல் 

மதுரை, டிச. 30-  மதுரை சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மத்தியச் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் என இரு பிரிவினராக பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சிறைக்குள் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை சிறைவாசிகள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய சிறைத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபடு வது வழக்கம். இந்நிலையில் மத்தியச்சிறையில் தண்டனைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் வெள்ளியன்று  அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். இதில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் நடத்திய சோதனையில் கைதிகள் முத்து ராஜா, பிரகாஷ், குமரன், பாபு ஆகியோர் தலா 10 கிராம் வீதம்  50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்தப்புகாரின்பேரில் கரிமேடு காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறவமங்கலம் பெரியாற்று கால்வாயை சீரமைத்திடுக!  சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை,டிச.30-  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா மறவமங்கலம் பெரி யாற்று நீடிப்பு  கால்வாயை சீரமைத்து மேம்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விவசாயிகள் கோரிக்கை முன் வைத்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறவமங்கலம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் தென்னரசு , மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை  ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் சாத்தப்பன் , விவசாயத்தொழிலா ளர் சங்க ஒன்றிய செயலாளர் வெள் ளைச்சாமி, கிளைச் செயலாளர் பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள்,  மறவமங்கலம் நீட்டிப்பு பெரியார் கால்வாய் வழியாக   8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இந்த நீட்டிப்பு கால்வாய் ரூ.60 கோடியில் உருவாக்கப்பட்டது. இந்த கால்வாய் உருவாக்கப்பட்டதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதனால் பாசன வசதி கிடைக்கவில்லை. இந்த கால்வாயை தாமராக்கிபகுதியிலி ருந்து பி .மலம் பட்டி, கூட்டுறவு பட்டி, உசிலம்பட்டி ,இடையமேலூர், காஞ்சி ரங்கால், சூரக்குளம் , செம்பூர், பொட்டக வயல் வழியாக மறவமங்கலம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது .இந்த கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. கருவேல் மரங்கள் ஏராளமாக வளர்ந்துள் ளன.   8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன  வசதி பெறுகிற இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

புத்தாண்டு முதல் நூறுநாள் திட்ட தொழிலாளர்கள் இணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்

மதுரை ஆட்சியர் தகவல்

மதுரை,டிச.30- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் இணையதளத்தில் (NMMS) APP  வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு. எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை பதிவேடுகளில்  பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப் படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், அரசு விதி முறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி  செய்யும் வகையில் என்ஆர்இஜிஏ ( Nrega)  இணைய தளத்தில் பதிவாகும்  வகையில்  தேசிய மொபைல் கண்கா ணிப்பு அமைப்பு ( National Mobile Monitoring System- NMMS) செயலி ( APP)    வாயிலாக 20-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் உள்ள பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் 16.05.2022 முதல் கட்டா யமாக்கப்பட்டுள்ளதாக மத்திய/மாநில அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் (தனிநபர் திட்ட பணிகள் தவிர)  என்ஆர்இஜிஏ ( Nrega)  இணைய தளத்தில் பதிவாகும்  வகையில்  தேசிய மொபைல் கண்கா ணிப்பு அமைப்பு ( National Mobile Monitoring System- NMMS) செயலி ( APP)    வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்க ளின் வருகையினை தவறாமல் (NMMS) செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும். எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் இதனை அறிந்து இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்    மரு. எஸ்.அனீஷ்சேகர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.