மதுரை, ஜூலை 8- மதுரை எஸ்எம்பி காலனி பகுதி யைச் சேர்ந்த முத்துபாண்டி - மீனா தம்பதி. முத்துபாண்டியின் தாயார் காளியம்மாள். இவர்கள் மதுரை அண்ணாநகர் மௌலானா சாகிப் தெருவில் உள்ள கணேஷ் என்ப வருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் முன்பண மாக கொடுத்தும் மாதம் 10ஆயி ரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு குடியேறி வசித்து வரு கிறார்கள். இந்நிலையில் கடந்த 4 மாதங் களுக்கு முன்பாக வீட்டினுள் உள்ளே இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து காளியம்மா ளுக்கு தலையில் காயம் ஏற் பட்டுள்ளது. இதனையடுத்து காளி யம்மாளின் சிகிச்சைக்காக 10ஆயி ரம் ரூபாய் வீட்டின் உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார், சில நாட்கள் கழித்து வீட்டை காலி செய்துகொடுப்பதாக கூறியதோடு, திடீரென ஏன் வீட்டை காலி பண்ண அவசரப்படுத்துகிறீர்கள் என முத் துபாண்டியின் மனைவி மீனா, வீட்டின் உரிமையாளரிடம் தொலை பேசி மூலமாக கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரின் உறவினர் சிலர் தாக்கியுள்ளதாக மீனா அண்ணா நகர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தார்.
இதனிடையே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் என்ப தால் அடிக்கடி தூய்மை பணிக்கான உபகரணங்களை எடுத்துவருவ தாக காரணத்தை கூறி ஆடைகள், வீட்டுச் சாமான்கள், மற்றும் ஆவ ணங்கள் ஆகியவற்றுடன் வீட்டிற்கு மூன்று பூட்டுகளை போட்டு பூட்டி விட்டு உரிமையாளர் சென்றுவிட்ட தாக கூறி காவல்நிலைத்திலும் தெரி வித்துள்ளனர். கடந்த 3 மாதங்கள் ஆகியும் வீட்டினுள் இருந்த பொருட்களை எடுக்க முடியாத நிலையில் மதிச்சி யம் பகுதியில் உள்ள முத்துபாண்டி உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்ப தோடு மாற்று உடைகள் கூட இல்லா மலும் , ஆவணங்கள் இல்லாத நிலையில் குழந்தையின் படிப்பும் தொடர முடியவில்லை என கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளனர் ஆனால் இதுவரையும் நடவ டிக்கை எடுக்காத நிலையில் வியா ழனன்று முதல் வீட்டு வாசலிலே காத்திருக்கின்றனர். இது குறித்து வீட்டு உரிமையா ளர் தரப்பில் கூறுகையில், முத்து பாண்டி தனது வீட்டிற்கு தொடர்ச்சி யாக வாடகை செலுத்த முடிய வில்லை என கூறியதாகவும் அவர் களே வீட்டை காலி செய்வதாக கூறிவிட்டு தாமதப்படுத்தியதாக வும், மேலும் வீட்டை காலி செய்ய பணம் வேண்டும் என கேட்டதாக வும் அதனால் மட்டுமே வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக தெரிவித் தார். இது தொடர்பாக முத்துப் பாண்டியிடம் பேசியபோது, நாங் கள் ஒப்பந்தப்படிதான் வாடகைக்கு வந்துள்ளோம். அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் 10 மாதம் வாடகை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் அதை கழித்து விட்டு வீட்டை காலி செய்ய சொல்லலாம் இதுவெல் லாம் காரணம் அல்ல. நாங்கள் தூய்மை பணியாளர் என்பது தான் ஒரு காரணமாக உள்ளது. வீட்டு உரி மையாளர் பொய்யான தகவலை கூறி வருகிறார் என்று தெரிவித் தார்.