தூத்துக்குடி, நவ.15 பழைய காயல் உப்பு உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உப்பள தொழி லாளர்களை உறுப்பினராக சேர்ப்பது தொ டர்பாகவும் சங்கத்தின் விதிகளை மீறி நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி புறநகர செயலாளர் ராஜா தலைமையில் மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பழைய காயல் பகுதி கீழ்புறம் சர்வே எண் 317/1A முதல் 317/8 வரை சுமார் 180 ஏக்கர் நிலங்களில் உப்பள தொழிலாளர்கள் கூட்டாக தன்பாடுபட்டு உப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த நிலையில் 1978 ம் ஆண்டு. 239 பழைய காயல் உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்ப னையாளர் கூட்டுறவு சங்கம் தொழிலா ளர்களால் உருவாக்கப்பட்டது. இந்த உப்பளத்தில் பணியாற்றும் தொழி லாளர்கள் தான் இந்த சங்கத்தில் உறுப்பின ராக இருக்க முடியும். இந்த சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்தான் இந்த உப்ப ளத்தில் குத்தகைதாராக இருக்க முடியும் என்று சங்கத்தின் விதி இருக்கிறது. இந்த உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் பங்கு தொகையுடன் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், இந்த விதியை மீறி திருவைகுண்டம் வட்டாரத்தில் இல்லாத உப்பளத்தில் தொடர் பில்லாத சிலரை சங்கத்தில் உறுப்பினராக இணைத்து இந்த உப்பளத்தில் குத்தகை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உப்ப ளத்தில் ஆண்டுக்கு ஒரு ஏக்கர் குத்தகை கட்டணமாக சுமார் 50ஆயிரம்முதல் 80ஆயிரம் வரையில் உள்ளது
மேற்கண்ட உப்பளத்தில் பல ஆண்டு களாக ஒருஏக்கருக்கு ரூ500 மட்டுமே குத்தகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு ரூ1000 வசூலிக்கப்படுகிறதாக தெரிகிறது. சுமார் 180 ஏக்கர் உப்பளத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு 50 ஏக்கர், 30 ஏக்கர் ,20 ஏக்கர் என பிரித்து கொடுத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு பல ஆயிரம் வசூலிக்கப்பட்டு ஒரு ஆயிரம் ஏக்கருக்கு குத்தகை கட்டணமாக வரவு காட்டப்படுகிறது. இதில் பலகோடி முறை கேடுகள் நடந்துள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்களது பங்கு தொகையை செலுத்தி இருக்கிறார் கள். ஒவ்வொரு ஆண்டும் லாபத்தில் உறுப்பி னர்களுக்கு பங்கு தொகை டிவிடன்ட் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இதுவரை எந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வில்லை. இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்க படாத பங்கு தொகை அனைவ ருக்கும். முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சங்கத்தில் ஒன்பது இயக்குனர்கள் தேர்தலும் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்த சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மற்றும் விற்பனை முறையில் ஒருசிலர் நலனுக்காக முறைகேடாக பலலட்சம் கொள்ளை லாபம் பெறுவதற்காகவே போலியான தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே இந்த சங்கத்தின் நிர்வாகத்தை களைத்திடவும் இந்த சங்கத்தின் உறுப்பி னர்கள் அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவித்து கூட்டுறவு துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ,காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜனநாயக முறைபடி புதிய நிர்வாக குழு தேர்தல் நடத்திட வேன்டும் இந்த சங்கத்தின் விதிகள்படி இது வரை முறையான வரவு செலவு முன் வைக்கப் படவில்லை .வெளிப்படையான வரவுசெலவு தனிக்கை செய்யப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகை யில் முறையாக வைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை உப்பள தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டு கிறோம் என கூறியுள்ளனர். இதில் பழையகாயல் பகுதியை சேர்ந்த கருப்பசாமி, ராஜமணி, பாஸ்கர், தர்ம லிங்கம், வைரக்கனி, மூக்காண்டி, தர்ம துரை பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.