புதுப்பள்ளி, மார்ச் 29- பாஜக-வினர் நடத்திவரும் கே- ரயில் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனச்சிக் காடு ஆர்எஸ்எஸ், பாஜக ஊழி யர்கள் அந்த அமைப்புகளில் இருந்து ராஜிநாமா செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தனர். ஆர்எஸ்எஸ் வைக்கம் ஒன் றிய முன்னாள் ஒருங்கிணைப்பா ளரும், பஜ்ரங் தள் மாநிலக்குழு உறுப்பினரும், யுவமோர்ச்சா பஞ்சாயத்து தலைவருமான விசாக் விஜயன், ஆர்எஸ்எஸ் வெள்ளுதுருத்தி முன்னாள் சிக்ஷக்கும், யுவமோர்ச்சா பஞ்சா யத்து பொதுச் செயலாளரு மான உண்ணி பரவேலில், யுவ மோர்ச்சா செயலாளர் பஞ்சா யத்து சிஷக் (ஆசிரியர்) விஷ்ணு விஜயன் ஆகியோர் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் இருந்து விலகி சிபிஎம்மில் இணைந்தனர். எதிர்காலத்தில் கேரளாவுக்கு பயனளிக்கும் கே-ரயில் திட்டத்தைத் தடுத்து, மக்களைப் பிரிக்கும் வகுப்பு வாதத்திற்கும், கேரளாவை பின்னுக்கு தள்ளும் முயற்சி களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ராஜிநாமா செய்வ தாக அவர்கள் தெரிவித்தனர். பருத்தும்பாறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளூர் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகுதி செயலாளர் சுபாஷ் பி.வர்கீஸ் மாலை அணிவித்து வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் கே.ஜே. அனில்குமார் தலைமை வகித் தார். வட்டாரச் செயலர் இ.ஆர்.சுனில்குமார், பி.கே.மோகனன், எம்.பாபு ஆகியோர் பேசினர்.