பழனியில் காந்தி தினசரி சந்தை வளாகத்தில் ரூ. 11 கோடியே 32 லட்சம் மதிப்பில் புதிய கடைகள் கட்டுமானப்பணியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, சிவகிரிப்பட்டி ஊராட்சி தலைவர் மாரியப்பன் சுப்ரமணிய பிரபு, நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.