தேனி, மே 30- கம்பத்தில் அரிக் கொம் பன் யானை தாக்கி உயிரி ழந்த தனியார் நிறுவன காவ லாளி பால்ராஜ் குடும்பத் திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார். தேனி மாவட்டம், கம்பத் தில் கடந்த 27 ஆம் தேதி புகுந்த அரிக்கொம்பன் யானை தாக்கியதில் தனி யார் நிறுவன காவலாளி பால் ராஜ் படுகாயம் அடைந்தார். தலை மற்றும் வயிறு பகுதி யில் ஏற்பட்ட காயத்திற்கு தேனி அரசு மருத்துவக் கல் லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இத னையடுத்து இறந்த பால்ரா ஜின் உடல் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அமைச்சர் அஞ்சலி இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி யில் இறந்த பால்ராஜ் உட லுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தி னார். அதன் பின்னர் பால்ராஜின் குடும்பத்தின ருக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற் கான காசோலையை வழங்கினார்.
மேலும் பால் ராஜ் குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்ட றிந்தார். அப்போது பால் ராஜின் குடும்பத்தினர் தங்க ளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கி டையே யானை தாக்கி உயி ரிழந்த பால்ராஜ் குடும்பத் திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் வழங் கப்படும் என்று முதல்வர் அறி வித்தார். இந்த தொகையும் பால்ராஜின் குடும்பத்திற்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரிய சாமி உறுதியளித்தார். அமைச்சருடன் ஆட்சியர் ஷஜீவனா, கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டி பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் உட னிருந்தனர். மறைந்த பால்ராஜுக்கு பிச்சையம்மாள் என்ற மனை வியும், 2 மகள்களும், 1 மக னும் உள்ளனர். 1 மகளுக் கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திரு மணம் ஆகவில்லை. அவ ருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரி ழந்தது அவரது குடும்பத்தி னர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.