சின்னாளப்பட்டி, ஆக.3- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 12,14,15,16 ஆகிய வார்டு பகுதிகளில் பொதுமக் களை நீண்ட நாள் கோரிக்கை யை ஏற்று,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமியின் உத்தரவின் பெய ரில், மாவட்ட கழக செயலா ளர் ஐபி.செந்தில்குமார் ஆலோசனைப்படி தமிழக அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக் கும் பணி துவக்கப்பட்டது. 15 ஆவது மானியக்குழு நிதி ரூ.18.67 லட்சம் மற்றும் பொதுநிதி ரூ.35.65 லட்சம் என மொத்தம் ரூ.54 லட்சம் மதிப்பிலான புதிய சாலை கள் அமைப்பதற்கான துவக்க நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, பேரூ ராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் கவுன் சிலர்கள் காமாட்சி, ராஜாத்தி, ராசு,செல்வி, தாம ரைச்செல்வி, ஹேமா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண் டனர்.