சிவகங்கை, செப்.1- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி ஆலங்குளம் பகுதியில் குடி தண்ணீர் 3 ஆண்டுகளாக வரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் விரைவுச்சாலை பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வா ளர், வட்டாட்சியர் ராஜா ஆகியோர் மறிய லில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் சமாதானக் கூட்டத்தில் பேசி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப் படும் என வட்டாட்சியர் ராஜா கூறியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இத னையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.