districts

img

மருத்துவக் காப்பீட்டை முறைப்படுத்த ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் கோரிக்கை

மதுரை/சிவகங்கை, செப்.6- யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவக் காப்பீடு அட்டை யை முறைப்படுத்த வேண்  டும். இந்தப் பிரச்சனையில் மின்வாரியம் தலையிட வலி யுறுத்தி  மதுரையில் புதூர்  மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலை வர் ஆர்.மாரிச்சாமி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஆர்.சர்தார் பாட்சா, மாவட்டப் பொருளாளர் ஆர். பால்ராஜ், ஓய்வு பெற்றோர்  நல அமைப்பின் ஒருங்கி ணைப்பு குழுச் செயலாளர் பால்முருகன், தொழிலாளர் முன்னேற்றச் சங்க சார்பில் முத்தையா, மாநிலத்  துணைப் பொதுச் செயலா ளர் வி.பிச்சைராஜன், மாவட்ட இணைச் செயலா ளர் வி.சுந்தர்ராஜன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவகங்கை மின் வாரிய  மேற்பார்வைப் பொறியா ளர் அலுவலகம் முன்பு மின்  வாரிய ஓய்வு பெற்ற நல  அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்  டம் நடைபெற்றது. ஜேசுராஜ், முத்துகிருஷ்ணன், மாவட்  டச் செயலாளர் விநாயக மூர்த்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் உமாநாத், மாவட்டச் செயலாளர் கருணாநிதி, பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்ட னர்.