districts

img

மேலூர் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

மதுரை, நவ.16- மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையசுக் காம்பட்டி கிராமத்தில் அழ கர்கோவில் சாலை சந்திப் பில் நவம்பர் 16 அன்று புதி தாக மதுபானக் கடை திறக்  கப்படுவதாக தகவல் வெளி யானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது மக்கள் அழகர் கோவில்- மேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த மேலூர் காவல் துணை கண்காணிப் பாளர் ஆர்லியஸ் ரிபோனி  தலைமையிலான காவல் துறையினர் மற்றும் மேலூர் வட்டாட்சியர் சரவணப்பெரு மாள் ஆகியோர் போராட்டத்  தில் ஈடுபட்ட பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.  அப்போது தங்கள் பகுதி யில் மதுபானக் கடை திறக்  கப்பட்டால் பல்வேறு பிரச்ச னைகள் உருவாகும். பள் ளிக்கூடங்கள் உள்ளதாலும் போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மது பானக்கடை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் வலி யுறுத்தினர். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் அளித்த உறுதியால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.