விருதுநகர், அக்.10- ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க கூடாது.போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும். வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாச தொகையை வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்கு வதற்கு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஏ சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் தங்கப் பழம் பேச்சுவார்த்தை குறித்து விளக்கி பேசினார். முடி வில் மண்டல பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.