இராமநாதபுரம், ஆக.25- நுகர்பொருள் வணிக கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழக சங்க (சிஐடியு) இராமநாத புரம் மண்டலம் சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் எம்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் ஏ.கணேசன், மண்டல துணைத் தலைவர் கே.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எம்.சிவாஜி, மண்டலச் செயலா ளர் எம்.பழனி, மண்டலத் துணைச் செயலாளர் எஸ்.சுரேஷ் ஆகியோர் பேசினர். இதேபோல், உணவு இடை வேளையின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாலைப்போக்கு வரத்து மாவட்டத் தலைவர் எம்.மணிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், நுகர்பொருள் வணிக கழகத்தில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 2013 முதல் 2016 வரை பணிபுரிந்த பருவகால தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், ரேஷன் கடைகளுக்கு எடை குறைவில்லாமல் பொருள்க ளை அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.