districts

பேருந்து நிலையங்களுக்கு மேலாளரை நியமிக்க கோரிக்கை

தஞ்சாவூர், நவ.23-  தமிழக பேருந்து நிலை யங்களை மேம்படுத்தி, செம்மைப்படுத்தி, நிர்வாகம் செய்திட பேருந்து நிலைய மேலாளரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை அலுவலர் வ.விவேகானந்தம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் உள்ள கழிப்பறைகளை தினந் தோறும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறை வசதி இல்லாத இடங்களில் நவீன கழிப்ப றைகள் மற்றும் குளிய லறைகளை  ஏற்படுத்த வேண்டும். கழிப்பறை வளா கத்தில் புகைபிடிப்பதை தடை செய்ய வேண்டும் பேருந்து நிலைய வளா கத்திற்குள் வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் முறை யாக வடிந்து செல்ல தகுந்த வடிகால் வாய்க்கால் வசதி களை ஏற்படுத்த வேண்டும். பெரிய பேருந்து நிலை யங்களில் முதல் உதவி சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும். பேரு ந்து நிலைய வளாகத்தில் பயணிகள் அல்லாதோர் பகல் மற்றும் இரவு நேரங்க ளில் தங்க தடை விதிக்க வேண்டும். பேருந்துகளிலும் பேருந்து நிலைய வளா கத்திலும் பிச்சை எடுப்பதை தடை செய்ய வேண்டும்.

பேருந்து நிலைய வளா கத்தில் உள்ள வணிக நிலை யங்களுக்கு முறையான இட வசதி செய்து தருவதுடன், நடைபாதைகளை ஆக்கிர மிப்பு செய்யாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பயணிகளுக்கு பேருந்துகள் வருகை நேரம், வழித்தடம் போன்ற செய்திகளை தெரிவிக்க பயணிகள் உதவி மற்றும் தகவல் மையத்தை அமைக்க வேண்டும். பயி களுக்கு முறையான அமரும் வசதி செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு வசதியாக சாய்தளங்கள் அமைக்க வேண்டும்.  ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க தங்கும் அறைகளை ஏற்ப டுத்தி தர வேண்டும். பேருந்து நிலையங்களில் பேருந்து வருகை, பாது காப்பு, சுகாதாரம், புகை பிடித்தலை தடை செய்யும் விதமாக அடிக்கடி அறி விப்புகளை ஒலிபரப்பு செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படும் வகையில் தகுந்த அறிவிப்பு கொடுத்து அனுப்ப வேண்டும். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக் ்களை நிறுவ வேண்டும். இந்த அனைத்து பணிகளை யும் திறம்பட நிர்வாகம் செய்ய ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் ரயில் நிலையம், விமான நிலையங்களில் இருப்பது போல் பேருந்து நிலைய மேலாளரை நியமிக்க வேண்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.