தேனி, டிச.2- வைகை பூர்வீக பாசன பகுதி 2-ல் சிவ கங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருதுமால் நதி உப வடிநில பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து வைகை ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வைகை பூர்வீக பாசன பகுதிகளான மதுரை, சிவ கங்கை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மூன்று கட்டமாக தண்ணீர் திறக்க கடந்த மாதம் அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 நாட்க ளாக இராமநாதபுரம், மதுரை மாவட்டங்க ளுக்கு இரண்டு கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக வைகை பூர்வீக பாசனப் பகுதி 1ல் சிவகங்கை மாவட்டத்திற்கும் ஞாயி றன்று முதல் வரும் 8ம் தேதி வரை 8 நாட்க ளுக்கு 752 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஞாயிற் றுக்கிழமை முதல் 8 நாட்களுக்கு 450 மில்லி யன் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஞாயிறன்று காலை விருதுநகர் கிருதுமால் நதி பகுதி களுக்கு வைகை அணையில் இருந்து வினா டிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. இதேபோல் வைகை ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்ட இந்த தண்ணீர் கிருதுமால் நதி வழியாக விருதுநகர் மாவட்ட உப வடிநில பாசனப்பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. வைகை அணை ஆற்றுப் படுகை வழியாக பூர்வீக பாசன பகுதி 2-ல் சிவகங்கை மாவட்டத்திற்கு 1500 கன அடி தண்ணீரும், கிருதுமால் நதி பகுதிக்கு 650 கன அடி தண்ணீரும், குடி நீருக்காக 69 கன அடி தண்ணீரும் மொத்தம் வைகை அணையில் இருந்து 2219 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 5 மாவட்ட கரையோர பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.