இராமநாதபுரம், மே 24- இராமநாதபுரம் இளைய மன்னரும் இராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா நாகேந்திர குமரன் சேதுபதி (58) மாரடைப்பால் செவ்வாயன்று காலை காலமானார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தவர். குமரன் சேதுபதிக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ள னர். இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சி யர் சங்கர் லால் குமாவத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.