இராமநாதபுரம், மார்ச் 11- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் இராமநாதபுரம் மாவட்ட இளம் பெண் கள் மாநாடு மாவட்ட துணைத் தலைவர் வில்லியம் ஜாய்சி தலைமையில் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சோலை யம்மாள் வரவேற்றார். கலைவாணி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார் .மாவட்ட செய லாளர் தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில் 9 பேர் கொண்ட இளம்பெண்கள் உபகுழு தேர்ந்தெடுக் கப்பட்டது. கன்வீனராக வில்லியம் ஜாய்சி, துணை கன்வீனராக சோலையம்மாள், அஞ்சனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர் மாநில பொருளாளர் பாரதி நிறைவுரை யாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் அஞ் சனா நன்றி கூறினார். மாநாட்டில் பரமக்குடியில் பள்ளி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை யில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திட வேண்டும். அரசு கலைக்கல்லூரி மாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடு பட்ட பேராசிரியரை விரைந்து கைது செய்ய வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் பள்ளி ,கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். நகராட்சி கிராமப்புற ஊராட்சிகளில் செயல்பாட் டில் உள்ள கழிப்பறை கட்டிடங்களை பரா மரிக்க வேண்டும். கழிப்பறை இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.