districts

மதுரை முக்கிய செய்திகள்

மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், ஆக.28- திருவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ்  மற்றும் குருவம்மாள் அறக்கட்டளை டிரஸ்ட் பொது மருத்துவமனை இனைந்து மேஜர் டி.பெருமாள் நினை வாக இலவச பொது மருத்துவ முகாமை பெருமாள் தேவன் பட்டியில் நடத்தின. முகாமிற்கு தலைவர் முருகதாசன், செயலாளர் கந்த சாமி,திட்டத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குநர்கள் ராம்குமார்,  உமர் பாரூக் ஆகியோர் வரவேற்றனர். பெருமாள்தேவன் பட்டி ஊர்த்தலைவர் முத்துராக்கன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பி.திருமால்ஜெயராஜ், மருத்து வர்கள் எஸ்.பி. எஸ்.குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர். கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்  பட்டது. வினோத்குமார் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை பால்சாமி, இளங்கோ ஆகியோர் செய்தி ருந்தனர்.

செக்கானூரணி அருகே கொலை

மதுரை, ஆக.28- மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள நடுமுதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப் பையா (60). அதே பகுதியில் தேநீர்க்கடை வைத்து நடத்தி  வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை வீட்டிலி ருந்து டீக்கடைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர்கள் சிலர், கருப்பையாவைக் கடத்திச் சென் றுள்ளனர்.  இது குறித்து செக்கானூரணி காவல்துறைக்குத் தக வல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கருப்பையாவைத் தேடி வந்த காவல்துறையினருக்கு, பன்னியான் கிராம  கண்மாய் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாகத் தக வல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர், இறந்து கிடந்தது கருப்பையா என்பதை உறுதி செய்த னர். அவரைக் கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டி யும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

மதுரை குருசாமி காலமானார்

மதுரை, ஆக.28-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பெத்தானி யாபுரம் பாலு படிப்பகத்தின் மூத்த தோழர் கே.குருசாமி (80) காலமானார். குருசாமி ஞாயிறன்று மாலை பாலு  படிப்பகத்தில் நாளிதழ்களைப் படித்துவிட்டு வீட்டிற்குச்  செல்லும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரி ழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், ஆர்.சசிகலா மேற்கு-1 பகுதிக் குழுச் செயலாளர் கு.கணே சன், மாவட்ட குழு உறுப்பினர் பி. ராதா, பாத்திமா நகர்  கிளைச் செயலாளர் முத்து உள்ளிட்ட பலர் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று மாலை நடைபெற்றது.

இலவச மிதிவண்டிகள் வழங்கல்

திருவில்லிபுத்தூர், ஆக.28- திருவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர்.சி மேல் நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. தென்காசி தொகுதி மக்களவை உறுப்பி னர் தனுஷ் எம்.குமார், நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாண வர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.  நிகழ்வில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வ மணி நகர்மன்ற உறுப்பினர் ‌தெரஸ், தாளாளர் சந்தன சகா யம், உதவிப் பங்குத்தந்தை செல்வநாயகம் அடிகளார்,  தலைமையாசிரியர் பரலோகம் ஆகியோர் பங்கேற்றனர்.

போக்சோவில் ஒருவர் மீது வழக்கு

காரியாபட்டி, ஆக.28- காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு. பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்  ளார். அப்போது பாண்டியராஜன் என்பவர் சிறுமியைக் கடுமையாகத் தாக்கி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல்  சத்தம் கேட்டு உறவினர்கள் அங்கு வரவே, அங்கிருந்து பாண்டிய ராஜன் தப்பியோடியுள்ளார். எனவே, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் செய்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியராஜனை தேடி வருகின்ற னர்.

கண்மாய் கரையில் லாரி ஒட்டியவர் மீது வழக்கு

திருச்சுழி, ஆக.28- அருப்புக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது பன்னிகுண்டு கண்மாய். இங் குள்ள கரை மீது கனரக வாகனங்கள் செல்லக் கூடாது எனத் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் புலியூரான் பகுதி மக்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதையடுத்து, கண்மாய் கரையில் வாக னங்களை இயக்கக் கூடாது என விருது நகர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில், பன்னிகுண்டு கிரா மத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) அரசு உத்தரவை மீறி, தடை செய்யப்பட்ட பகுதி யில் கனரக வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்த திருச்சுழி காவல்  துறையினர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

துப்பாக்கி சுடும் போட்டி  தேனி பெண் காவலர் இரண்டாமிடம்

தேனி, ஆக.28- தென்னிந்திய அளவில் துப்  பாக்கி சுடும் போட்டியில் தேனி ஆயு தப்படை பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் பிரியா இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். தென்னிந்திய அளவில் துப்  பாக்கி சுடும் போட்டி திருவனந்த புரம் ரைபிள் கிளப்பில் நடை பெற்றது. தேனி மாவட்டத்திலி ருந்து ஆயுதப்படை பெண் தலை மைக் காவலர் பிரியா கலந்து கொண்டார். போட்டியில் இரண் டாம் இடத்தை பிடித்த அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  இதன் மூலம் தேசிய அளவில் நடை பெறும் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

அமைச்சரைப் பாராட்டி தீர்மானம்

சின்னாளபட்டி, ஆக.28- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் ஹேம லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்  தட்சிணாமூர்த்தி (கி.ஊ) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் லாரன்ஸ் வரவேற் றார். கூட்டத்தில் தமிழக முதல்வரின்  கிராமச் சாலை மேம்பாட்டுத் திட் டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்  றும் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் மழைக் காலத்திற்கு முன் முடிக்கும் வகை யில் நடைபெற்று வரும் திட்டப் பணி களை உறுப்பினர்கள் பாராட்டி னர். ஆத்தூர் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட கிராமங்களின் வளர்ச்சிக்காக ஒன்றிய- மாநில  அரசுகளின் நிதிகளைப் பெற்றுத்  தந்த ஊரக வளர்ச்சித் துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி பாராட்டு வது உட்பட 17 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  ஒன்றிய மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைகள் தீர் 8300175888-ஐ தொடர்பு கொள்ளலாம்

இராமநாதபுரம், ஆக.28- பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரி விப்பதற்கும் பல துறைகள் தொடர்பான தக வல்களைத் தெரிந்து கொள்வதற்கும் ஏது வாக 8300175888 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் கூறியதாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க ஏதுவாக வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது  வழங்கப்படும் பதிவுக்கான காலதாம தத்தை குறைக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரை தளத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 8300175888 எண்ணிற்கு தொடர்பு  கொண்டு மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் மக்க ளின் குறைகள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த  அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மனு தாரருக்கு உரிய பதில் காலதாமதமின்றி கிடைக்கும் வகையில் கைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 1098, பேரிடம் மேலாண்மை சார்பில் 1077, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 181, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு  கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.