districts

img

தெப்பக்குளத்தில் கலைஞர்களின் இசை, நாட்டியங்களுடன் பேரணி

மதுரை, ஆக.11- மா மதுரை விழா ஆகஸ்ட் 8 ஆம்  தேதி துவங்கியது. பல்வேறு கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகள் அரங்கேறின. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என கோலாகலத்துடன் தொடர்ந்து நடை பெற்றது.

யங் இந்தியன்ஸ் தலைவர்  பைசல் அகமது தலைமையில் தமுக்கம் அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, டால்பின் பள்ளி தாளாளர் கண்மணி, ஒருங்கிணைப்பாளர் விக்ராந்த் கார்மேகம், துணைத் தலைவர் ஷெங்கர் லால் மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய சு.வெங்க டேசன், மாமதுரை விழா குறித்து பகிர்ந்து கொள்ள நிறைய உள்ளது. இந்த நிகழ்வை இன்னும் மிகப்பெரிய நிகழ்வாக மாற்றுவதற்கு அடுத்து எல்லோரும் ஒன்றிணைவோம். மாமதுரை போற்றுவோம் விழா வின் நாயகன் முன்னாள் மாவட்ட ஆட்சி யர் அன்சுல் மிஸ்ரா. உத்தரப்பிர தேசத்தில் பிறந்த அவர், மதுரை  மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற் றார். 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரி டம் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி  குறித்து பேசினேன். அதை உடன டியாக செயல்படுத்தி காட்டினார். அது வும் மதுரையைப் பற்றி தெரியாத ஒரு வர் அதை செய்து காட்டினார்” என்றார்.

கலை ஊர்வலம்

ஞாயிறன்று மாலை தெப்பக் குளம் அருகில் நடந்த கலை ஊர் வலத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தியாக ராஜர் கல்லூரி தாளாளர் ஹரி தியாக ராஜன், மதுரை மாநகராட்சி ஆணை யாளர் தினேஷ் குமார் மற்றும் போக்கு வரத்து காவல்துறை கண்காணிப்பா ளர் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இதில் தமிழகத்தின் பாரம்பரிய இசைநிகழ்ச்சியும், தேவராட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மான் கொம்பு ஆட்டம், சிலம்பாட்டம் உள் ளிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மற்றும் அலங்கார ஊர்திகளும் தெப்பக்குளத்தில் இருந்து  துவங்கி குருவிக்காரன் சாலை, ஆவின் வளா கம், கே.கே. நகர், பெரியார் நினைவு அலங்கார நுழைவு வாயில் அருகில் நிறைவு பெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரவு சிம்மக்கல், செல்லூர் இணைப்பு பாலத்தில் இரவு வாணவேடிக்கை நிகழ்வோடு மாமதுரை திருவிழா நிறைவுபெற்றது.