districts

img

இராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பிறந்தநாள் விழா

இராஜபாளையம், அக்.26- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சுதந்திர  காலத்திற்கு முன்பே இராஜபாளையம் மாடசாமி கோவில்  தெரு பகுதியில் ஆரம்பக் கல்வியை நிலைநாட்டி இப்பகுதி  கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் அடித்தளமிட்ட ஸ்ரீ ராவ்பகதூர் ஏ.கே.டி.தர்மராஜாவின் 146 வது பிறந்த தின  விழா கொண்டாடப்பட்டது.  காலையில் ஏ.கே.டி. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்  பள்ளி முன்பிருந்து பள்ளி மாணவ -மாணவியரின் ஊர்  வலம் துவங்கியது. ஏ.கே.டி.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சக்கனியம்மாள் ஆங்கில வழி கல்வி  பள்ளி, ஏ.கே.டி. தர்மராஜா ஆரம்பப் பள்ளி, ஏகேடி தர்ம ராஜா பெண்கள் நடுநிலைப்பள்ளி, மாணவ மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.  பின்னர் பழையபாளையம் சத்திரிய ராஜூக்கள் சமூக  சாவடி முன்புள்ள திடலில் அமைந்துள்ள ஏ.டி.தர்மராஜா  முழு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரி, ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்வியில் கல்லூரி களைச் சார்ந்த மாணவ -மாணவியர், ஆசிரியர், ஆசிரியை கள் மற்றும் சமூக பிரமுகர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.  தொடர்ச்சியாக 75 மாணவ -மாணவிகளுக்கு பள்ளிச்  சீருடையும், ஆயிரம் லிட்டர் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர், தொடர்ச்சியாக பள்ளி மாணவ -மாணவியர் களுக்கு கேக் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்  கப்பட்டன.