districts

15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதா?

விருதுநகர், ஜூலை 28- விருதுநகரில் 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவது ஏன்?என பெரும்பாலான உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். விருதுநகர் நகராட்சியின் மாதாந்தி ரக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலை மையில் நடைபெற்றது. ஆணையாளர் லீனா சைமன் , பொறியாளர் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : தனது வார்டு பகுதியில் குடிநீர் வந்து 15 நாட்களாக விட்டது. எவ்வளவு குடிநீர் நகராட்சிக்கு வருகிறது என உறுப்பினர் முத்துராமன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைவர், ஆணைக்குட்டம் கிணறுகளில் இருந்த 28 லட்சம் லிட்டர்,  தாமிரபரணி திட்டம் மூலம் 20 லட்சம் லிட்டர், ஒண்டிப்புலி பகுதியில் இருந்து 12 லட்சம் என நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் கிடைக்கிறது என்றார். இதையடுத்து பேசிய முத்துராமன் அப்படியென்றால் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கலாமே. ஏன் இவ்வளவு தாமதம் என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பினர்கள் முத்துலட்சுமி, மிக்கேல் ராஜ், சரவணன், பேபி ஆகியோர் கூறினர். பின்பு பேசிய தலைவர், 15 நாட்களாக தாமிரபரணி குடிநீர் வராத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது உண்மை தான். இனி விரைவில் குடிநீர் வரும் என்றார். உப்புத்தன்மை உள்ள குடிநீர் எப்போது மாற்றம் செய்யப்படும். 2வது தாமிரபரணி குடிநீர் திட்டம் எப்போது நிறைவு பெறும் என உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பேசிய தலைவர், செப்டம்பர் 30க்குள் பணிகள் நிறைவு பெறும் என்றார். தரையில் அமர்ந்து கவுன்சிலர் தர்ணா    தனது வார்டு பகுதியில் பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பலமுறை கோரிக்கையை தெரிவித்தும்  நகராட்சிப் பணிகள் நடைபெறவில்லையென தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார் 14வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்குமார். பின்பு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என உறுதியளித்து  தலை வர் சமாதானம் செய்தார். ஆட்டுச் சந்தையை ஏலம் விடுவது தொடர்பான பொருளில் அரசு மதிப்பீட்டை விட  குறைவாக ஏலதாரர்  கேட்டுள்ளார். எனவே, எத்தனை பேர் இப்பொருளை எதிர்க் கிறீர்கள் என தலைவர் விளக்கம் கூறினார். அப்போது குறுக்கிட்ட உறுப்பினர் முத்துராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகி யோர் கடந்த இரு வருடங்களாக இந்த ஏலம் விடப்படவில்லை. அதுவரை நகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட பணம் எவ்வளவு? என கேள்வி எழுப்பினர். பின்பு, 12   உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  தீர்மானம் நிறை வேறியது. தனியார் நிறுவனத்தினர் சரிவர குப்பைகளை வீடு வீடாகக் சென்று சேக ரிப்பதில்லையென உறுப்பினர் முத்துராமன், ஜெயக்குமார் ஆகியோர் புகார் தெரி வித்தனர். பின்பு, பேசிய தலைவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சொத்து வரி பெயர் மாற்றம் செய்திட மற்றும்  புதிய சொத்து வரிக்கு மனுப் போட்டு பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லையென உறுப்பினர் ஜெயக்குமார் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆணையாளர், டிசம்பர் மாதம் முதல் கோப்புகள் கிடப்பில் இருந்தன. நிரந்தர ஆணையாளர் இல்லாத காரணத்தால் இந்தநிலை இருந்தது. தற்போது 50 விண்ணப்பங்கள் வரை நேரில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.