அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் பஸ் நிறுத்த அறிவிப்பு ஒலி (ஆடியோ அறிவிப்பு) செய்து தர வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் பி.வீரமணி, மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன், சொர்ணவேல், ஜோதிபாசு, ராஜேந்திரன், ராஜகுரு, விஸ்வநாதன், ஆனந்த் ஆகியோர் மதுரை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.