districts

img

கடந்த காலங்களின் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக!

23 ஆவது வார்டு மாமன்ற  உறுப்பினர் டி.குமரவேல் பேசு கையில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் கண்மாய்கள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. மாரியம்மன் தெப்பக் குளம், கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட தெப்பக்குளங்களை பராமரித்து தூர்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி செல்லூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் குலமங்கலம் சாலை பகுதியில் பணி என்பது மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது ஒப்பந்ததாரர்கள் யார் சொல்வதையும் கேட்பதில்லை. எனவே மாநகராட்சி கண்காணித்து பணிகளை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பணிகளுக்கு சொந்த வாகனங்களை அதிக அளவில் வாங்க வேண்டும். 2011 - 2016ஆம் ஆண்டு மதுரையில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு,  பல்வேறு பராமரிப்பு பணிகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சரிவர பணிகள் நடைபெறவில்லை என்று தோன்றுகிறது. அத னால் தான் இன்றைக்கு பல்வேறு பணிகள் நடப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே கடந்த காலங்களில் நடைபெற்ற பணிகளுக்கான வெள்ளை அறிக்கை என்பதை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.