மதுரை, ஏப்.23- தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்ப கோணம், கன்னியாகுமரி, கரூர், சிவ காசி ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் சித்த மருத்துவ சேவையை தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கு விசார ணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி, தஞ் சாவூர், கும்பகோணம், கன்னியா குமரி, கரூர், சிவகாசி ஆகிய புதிதாக தொடங்கப்பட்டுள்ள 6 மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ சேவையை தொடங்கி நடுத் தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், சித்த மருத்துவ சேவை வழங்க வேண்டும்.
ஆயுர்வேத, யுனானி, சித்தா போன்ற இந்திய மருத்துவ முறையை ஒன்றிய, மாநில அரசுகள் ஊக்குவித்து வரும் நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சித்த மருத்துவ பிரிவு இல்லாததால் மக்கள் சித்த மருத்துவ சேவையை பெற முடி யாமல் அலோபதி மருத்துவ முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தமிழகத்தில் ஏழு மாநகராட்சிகளில் உள்ள நகர்ப்புற மருத்துவமனைகளில் சித்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, புதிதாக தொடங்கப் பட்டுள்ள 6 மாநகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவை தொடங்கி சேவை வழங்க உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகி யோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசார ணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.