சிவகங்கை, அக்.22- சிவகங்கை மாவட்டத் தில் 67 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவி களுக்கும் 37 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி களின் மாணவர்களுக்கும் என மொத்தம் 12,490 மாணவ, மாணவிகளுக்கும் விலை யில்லா மிதிவண்டி வழங்கும் பணி மாவட்ட முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். சிவகங்கை மாவட்டத் தில் சிங்கம்புணரி வட்டம் ஏரி யூர், எஸ். எஸ் .கோட்டை, முறையூர், கிருங்காகோட்டை, ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிங்கம் புணரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் ஆர்.எம். ஆர். எம் .அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியி லும் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் விலை யில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார் .
அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், தமி ழகம் முழுவதும் அனைத்து தரப்பு மேல்நிலைக் கல்வி பயின்று வரும் மாணவர் களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி கற்பதிலும் வேலை வாய்ப்பு களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன .அரசு பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை யை தமிழக முதல்வர் உரு வாக்கி இருக்கிறார். உயர் கல்வி பயின்று வரும் மாண வியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை யும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி பிற மாநிலங்க ளுக்கு முன்மாதிரியாக தமி ழகம் திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அந் தந்த பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ,மாவட்ட கல்வி அலுவலர் சண்முக நாதன். சிங்கம்புணரி பேரூ ராட்சி தலைவர் அம்பலம் முத்து, திருபுவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், சிங்கமலை வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்ற தலை வர்கள் கலந்து கொண்ட னர்.